கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்கு செல்வது என்பது இப்பொழுது சாதாரணமாகி விட்டது. முன்னர் எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் வெளி நாட்டு சுற்றுலா என்று இருந்து வந்தது. ஆனால், அது இப்போது சாதாரணமாகி விட்டது. இதற்காக கடன் கூட வங்கிகளில் வாங்க முடியும். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வரும் இலங்கை அரசு, சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் விதமாக விசா தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் விசா என்பது மிக முக்கியமானதாக இருந்து வந்த நிலை தற்போது மாறியுள்ளது. நேபாளம், பூட்டான், தாய்லாந்து, மாலத்தீடு, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த வருசையில் தற்போதும் இலங்கையும் சேர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், விசா இல்லாமல் 6 மாதங்களுக்கு இலங்கை செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி , ரஷ்யா, சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான்,நேபால், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, மாலேசியா, கனடா,இத்தாலி, ஓமன் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}