அன்னிக்கு அந்த 4.. இன்னிக்கு இந்த 4.. வெள்ளத்தில் தவிக்கும் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி!

Dec 17, 2023,06:53 PM IST

திருநெல்வேலி: டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது மாதத்தின் மத்தியில் தென் கோடி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை வெள்ளத்திடம் சிக்கியுள்ளன.


சென்னையில் பெரு மழை பெய்தால் வெள்ளக்காடாகி விடும். சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும் இதில் சிக்கிக் கொள்ளும்.  எப்போதெல்லாம் பெரு மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்த நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம்.




இந்த நிலையில் இப்போது தென் கோடி மாவட்டங்கள் நான்கு, வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எப்படி சென்னையில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ அப்படியே டிட்டோ இங்கும் நடந்து வருகிறது.


குறிப்பாக நாகர்கோவில், திருநெல்வேலி நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நாகர்கோவிலின் பல பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. இதே நிலைதான் நெல்லையிலும். பல பகுதிகளிலும் வெள்ளம் ஆற்றிலும் ஓடுகிறது, ஊருக்குள்ளும் ஓடுகிறது.



பல இடங்களில் இடுப்பளவு ஓடும் தண்ணீரில் குதித்து இளைஞர்கள் நீச்சலடித்து மகிழ்வதைக் காண முடிந்தது. "வெள்ளம் வந்தா அழுது புரள நாங்க என்ன சென்னையாலே.. ஜாலியா என்ஜாய் பண்ற நெல்லைல" என்று அவர்கள் சொல்லாமல் சொல்வது போல உள்ளது. கூடங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாளையும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரியில் பேய் மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இப்போதுதான் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்திலிருந்து மீண்டு இப்போது வெள்ள நிவாரணத் தொகையை வாங்க ஆரம்பித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்