டெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 403 பேர் வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில் இதை தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.முரளீதரன் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இயற்கை மரணங்கள், விபத்து, கொலை என்று பல்வேறு காரணங்களினால் இந்த மாணவர்கள் மரணத்தை சந்தித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவிலான மாணவர்கள் இறந்தது கனடாவில்தான். கனடாவில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிாலந்தில் 48, ரஷ்யா 40, அமெரிக்கா 36, ஆஸ்திரேலியா 35, உக்ரைன் 21, ஜெர்மனி 20, சைப்ரஸ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர்.

இந்திய மாணவர்களின் நலன் குறித்து மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க அனைத்துத் தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. இந்திய தூதரக அதிகாரிகள், தத்தமது நாடுகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு படிக்கும் இந்திய மாணவர்களைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் உடனடியாக தூதரக அதிகாரிகள் அதுகுறித்து முன்னுரிமை கொடுத்து ஆவண செய்கிறார்கள். அவசர கால மருத்துவ உதவி, நாடு திரும்ப உதவுவது, வெளிநாட்டுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் தங்குமிடத்தை தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் உதவுவது ஆகிய பணிகளையும் இந்தியத் தூதரகம் செய்கிறது என்றார் அமைச்சர் முரளீதரன்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}