2018 முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மரணம்.. மத்திய அரசு தகவல்

Dec 08, 2023,06:17 PM IST

டெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 403 பேர் வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில் இதை தெரிவித்துள்ளது.


மத்திய அமைச்சர் வி.முரளீதரன் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இயற்கை மரணங்கள், விபத்து, கொலை என்று பல்வேறு காரணங்களினால் இந்த மாணவர்கள் மரணத்தை சந்தித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவிலான மாணவர்கள் இறந்தது கனடாவில்தான். கனடாவில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிாலந்தில் 48, ரஷ்யா 40, அமெரிக்கா 36, ஆஸ்திரேலியா 35, உக்ரைன் 21, ஜெர்மனி 20, சைப்ரஸ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர்.




இந்திய மாணவர்களின் நலன் குறித்து மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க அனைத்துத் தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. இந்திய தூதரக அதிகாரிகள், தத்தமது நாடுகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு படிக்கும் இந்திய மாணவர்களைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இந்திய மாணவர்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் உடனடியாக தூதரக அதிகாரிகள் அதுகுறித்து முன்னுரிமை கொடுத்து ஆவண செய்கிறார்கள். அவசர கால மருத்துவ உதவி, நாடு திரும்ப உதவுவது, வெளிநாட்டுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் தங்குமிடத்தை தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் உதவுவது ஆகிய பணிகளையும் இந்தியத் தூதரகம் செய்கிறது என்றார் அமைச்சர் முரளீதரன்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்