துபாய்: இந்தியர்கள் துபாய்க்கு பலமுறை வந்து செல்லும் வகையில் ஐந்து ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளது துபாய் அரசு.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் மோகம் கொரோனாவுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு மோகம் கொரோனா காலத்தில் அடியோடு நின்று போயிருந்தது. உயிர் பயம் ஏற்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து காணப்பட்டது. அது தற்பொழுது மாறி விட்டது.
மறுபடியும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறலாம். அதிலும் வளைகுடா நாடுகளாகிய ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர் அதிகமாகி விட்டனர். இருநாடுகள் இடையே பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது துபாய் அரசு.
இதன் காரணமாக, கடந்த ஆண்டில் துபாய்க்கு 24 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் துபாய் அரசு புதிய விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமாம். இந்த 5 ஆண்டு விசாவால் ஒருவர் பல முறை துபாய்க்கு செல்ல முடியுமாம்.
மேலும் இந்த விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 2 முதல் 5 நாட்களுக்குள் வழங்கப்படுகிறதாம். இந்த விசாவை பயன்படுத்தி ஒருவர் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் துபாயில் தங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விசாவை பிஸினஸ் டிரிப், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறை பயன்பாட்டில் உள்ள காரணத்தினால் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}