துபாய்: இந்தியர்கள் துபாய்க்கு பலமுறை வந்து செல்லும் வகையில் ஐந்து ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளது துபாய் அரசு.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் மோகம் கொரோனாவுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு மோகம் கொரோனா காலத்தில் அடியோடு நின்று போயிருந்தது. உயிர் பயம் ஏற்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து காணப்பட்டது. அது தற்பொழுது மாறி விட்டது.
மறுபடியும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறலாம். அதிலும் வளைகுடா நாடுகளாகிய ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர் அதிகமாகி விட்டனர். இருநாடுகள் இடையே பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது துபாய் அரசு.

இதன் காரணமாக, கடந்த ஆண்டில் துபாய்க்கு 24 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் துபாய் அரசு புதிய விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமாம். இந்த 5 ஆண்டு விசாவால் ஒருவர் பல முறை துபாய்க்கு செல்ல முடியுமாம்.
மேலும் இந்த விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 2 முதல் 5 நாட்களுக்குள் வழங்கப்படுகிறதாம். இந்த விசாவை பயன்படுத்தி ஒருவர் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் துபாயில் தங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விசாவை பிஸினஸ் டிரிப், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறை பயன்பாட்டில் உள்ள காரணத்தினால் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}