துபாய்க்கு... பலமுறை போய் வருவதற்கு வசதியாக.. 5 ஆண்டு விசா.. இந்தியர்களுக்கு மட்டும்!

Feb 23, 2024,05:59 PM IST

துபாய்: இந்தியர்கள் துபாய்க்கு பலமுறை வந்து செல்லும் வகையில் ஐந்து ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளது துபாய் அரசு.


வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் மோகம் கொரோனாவுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு மோகம் கொரோனா காலத்தில் அடியோடு நின்று போயிருந்தது. உயிர் பயம் ஏற்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து காணப்பட்டது. அது தற்பொழுது மாறி விட்டது. 


மறுபடியும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறலாம். அதிலும் வளைகுடா நாடுகளாகிய ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர் அதிகமாகி விட்டனர். இருநாடுகள் இடையே பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது துபாய் அரசு. 




இதன் காரணமாக, கடந்த ஆண்டில் துபாய்க்கு 24 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் துபாய் அரசு புதிய விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா 5  ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமாம். இந்த 5 ஆண்டு விசாவால் ஒருவர் பல முறை துபாய்க்கு செல்ல முடியுமாம். 


மேலும் இந்த விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு  2 முதல் 5 நாட்களுக்குள் வழங்கப்படுகிறதாம். இந்த விசாவை பயன்படுத்தி ஒருவர் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் துபாயில் தங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விசாவை பிஸினஸ் டிரிப், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. 


இந்த முறை பயன்பாட்டில் உள்ள காரணத்தினால் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?

news

CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்