துபாய்: இந்தியர்கள் துபாய்க்கு பலமுறை வந்து செல்லும் வகையில் ஐந்து ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளது துபாய் அரசு.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் மோகம் கொரோனாவுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு மோகம் கொரோனா காலத்தில் அடியோடு நின்று போயிருந்தது. உயிர் பயம் ஏற்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து காணப்பட்டது. அது தற்பொழுது மாறி விட்டது.
மறுபடியும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறலாம். அதிலும் வளைகுடா நாடுகளாகிய ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர் அதிகமாகி விட்டனர். இருநாடுகள் இடையே பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது துபாய் அரசு.
இதன் காரணமாக, கடந்த ஆண்டில் துபாய்க்கு 24 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் துபாய் அரசு புதிய விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமாம். இந்த 5 ஆண்டு விசாவால் ஒருவர் பல முறை துபாய்க்கு செல்ல முடியுமாம்.
மேலும் இந்த விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 2 முதல் 5 நாட்களுக்குள் வழங்கப்படுகிறதாம். இந்த விசாவை பயன்படுத்தி ஒருவர் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் துபாயில் தங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விசாவை பிஸினஸ் டிரிப், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறை பயன்பாட்டில் உள்ள காரணத்தினால் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}