சென்னை - ஹைதராபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ..50 பயணிகள் காயம்

Jan 10, 2024,11:35 AM IST

ஹைதராபாத்: சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட  பயணிகள் காயமடைந்துள்ளனர்.


சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சார்மினார் விரைவில் சென்றது.  சார்மினார் விரைவு ரயில், நம்பள்ளி ரயில் நிலையத்தில், நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் தாண்டி சென்று  தடுப்புச் சுவரியில் மோதியுள்ளது. அப்போது 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. ரயில் தடம் புரண்டதில் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  நல்ல வேலையாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. 




விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது பயணிகளிடம் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்