சென்னை: தமிழ்நாட்டில் 50,000 பள்ளி மாணவர்கள் பிளஸ்டூ தேர்வு எழுத வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுபோல அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு ,அதுவும் பொதுத் தேர்வை எழுத வராமல் ஆப்சென்ட் ஆனது இல்லை என்பதால்இது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் வெளியிட்டுள்ள டிவீட் விளக்கம்:
50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதவில்லை.. உண்மை நிலவரம் . மாணவர்கள் முன்பெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்கள் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது பெண்கள் திருமணம் ஆகி விட்டாலோ இனி வர மாட்டார்கள் என்று தெரிந்து விட்டால் வருகை பதிவேட்டில் பெயரை நீக்கிவிடுவார்கள்.
இப்போது EMIS இணையதளம் வந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு எத்தனைமாதங்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை நீக்கமுடியாது. கல்வித்துறை கண்காணித்து அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் தரும். இடைநின்ற மாணவர்களை வட்டார வள மைய உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கி பள்ளியில் சேர்க்க வேண்டும்.
11ம் வகுப்பிற்கே வராத மாணவர்கள் பெயர்கள்கூட 12ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் தடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் தேர்வு பயத்தால் அல்லது கற்றல் இடைவெளி காரணமாக தேர்வு எழுதவில்லை.இதுதான் தேர்வு எழுதாத மாணவர்கள் அதிகமாக இருப்பதற்குகாரணம் என்பது அரசுப்பள்ளி ஆசிரியராக என் கருத்து.
இந்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் முன்பே கற்றலை நிறுத்தி இருப்பார்கள். இந்த தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவது எளிது. மீண்டும் தேர்வெழுத வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் செல்வம் கூறுவதைப் போல அரசு இதில் கவனம் செலுத்தி, தேர்வு எழுதாமல் போன மாணவ, மாணவியரைக் கண்டு மீண்டும் தேர்வெழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}