50,000 மாணவர்கள் ஏன் பிளஸ்டூ தேர்வு எழுத வரவில்லை.. இதுதான் காரணம்.. ஆசிரியர் விளக்கம்!

Mar 18, 2023,01:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 50,000 பள்ளி மாணவர்கள் பிளஸ்டூ தேர்வு எழுத வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டில் இதுபோல அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு ,அதுவும் பொதுத் தேர்வை எழுத வராமல் ஆப்சென்ட் ஆனது இல்லை என்பதால்இது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் வெளியிட்டுள்ள டிவீட் விளக்கம்:


50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதவில்லை.. உண்மை நிலவரம் . மாணவர்கள் முன்பெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்கள் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது பெண்கள்  திருமணம் ஆகி விட்டாலோ இனி வர மாட்டார்கள் என்று தெரிந்து விட்டால் வருகை பதிவேட்டில் பெயரை நீக்கிவிடுவார்கள்.



இப்போது EMIS இணையதளம் வந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு எத்தனைமாதங்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை நீக்கமுடியாது. கல்வித்துறை கண்காணித்து அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் தரும். இடைநின்ற  மாணவர்களை வட்டார வள மைய உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கி பள்ளியில் சேர்க்க வேண்டும்.


11ம் வகுப்பிற்கே வராத மாணவர்கள் பெயர்கள்கூட 12ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் தடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட  சதவீத மாணவர்கள் தேர்வு பயத்தால் அல்லது கற்றல் இடைவெளி காரணமாக தேர்வு எழுதவில்லை.இதுதான் தேர்வு எழுதாத மாணவர்கள் அதிகமாக இருப்பதற்குகாரணம் என்பது அரசுப்பள்ளி ஆசிரியராக என் கருத்து.


இந்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் முன்பே கற்றலை நிறுத்தி இருப்பார்கள்‌. இந்த தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவது எளிது. மீண்டும் தேர்வெழுத வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் செல்வம்  கூறுவதைப் போல அரசு இதில் கவனம் செலுத்தி, தேர்வு எழுதாமல் போன மாணவ, மாணவியரைக் கண்டு மீண்டும் தேர்வெழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.


சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்