டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் நோக்கில் இந்திய அரசின் "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று வரை மொத்தம் 517 இந்தியர்கள் வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலரும் மாணவ, மாணவியர் ஆவர். துர்க்மெனிஸ்தானின் அஷ்கபத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அண்மையில் மேலும் சில இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சகமும் (MEA) டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. தாயகம் திரும்பியவர்கள், இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். ஈரானில், குறிப்பாக டெஹ்ரான் மற்றும் மஷாத் ஆகிய இடங்களில் நிலவரம் கவலைக்கிடமாக இருப்பதாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் உட்பட 110 இந்திய மாணவர்களின் முதல் குழு, வட ஈரானிலிருந்து முதலில் ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டு, பின்னர் புதுடெல்லிக்கு சமீபத்தில் அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியர்களை மீட்பதற்காக தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மட்டும் திறந்து விட்டுள்ளது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் அங்கிருந்து இந்தியர்கள் பலரும் தாயகம் திரும்ப விரும்பியதால் தற்போது அவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
கல்லறை தேடுகிறது!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)
உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}