டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் நோக்கில் இந்திய அரசின் "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று வரை மொத்தம் 517 இந்தியர்கள் வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலரும் மாணவ, மாணவியர் ஆவர். துர்க்மெனிஸ்தானின் அஷ்கபத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அண்மையில் மேலும் சில இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சகமும் (MEA) டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. தாயகம் திரும்பியவர்கள், இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். ஈரானில், குறிப்பாக டெஹ்ரான் மற்றும் மஷாத் ஆகிய இடங்களில் நிலவரம் கவலைக்கிடமாக இருப்பதாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் உட்பட 110 இந்திய மாணவர்களின் முதல் குழு, வட ஈரானிலிருந்து முதலில் ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டு, பின்னர் புதுடெல்லிக்கு சமீபத்தில் அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியர்களை மீட்பதற்காக தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மட்டும் திறந்து விட்டுள்ளது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் அங்கிருந்து இந்தியர்கள் பலரும் தாயகம் திரும்ப விரும்பியதால் தற்போது அவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
{{comments.comment}}