லிப்ட் அறுந்து விழுந்து.. 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்!

Sep 11, 2023,12:11 PM IST
மும்பை:  மும்பை அருகே அடுக்குமாடிக் கட்டடுமானத்தின்போது, 40வது தளத்திலிருந்து அறுந்து விழுந்த லிப்டில் இருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பல்கும் பகுதியில் 40 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடியின் 40வது தளத்தில் இறுதிப்பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட பணிகளுக்காக தற்காலிகமாக லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்து. 



இந்த லிப்டில் கட்டுமான பொருட்கள் ஏற்றுவதற்கு பயன்படுத்தி வந்த நிலையில், 
கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை எடுத்துக் கொண்டு 8 தொழிலாளர்கள் சென்றனர். இதில் கட்டிடடத்தின் 7-வது மாடி அருகே சென்ற போது லிஃப்ட் திடீரென பழுதடைந்து அப்படியே நின்றது. இதனால் பயந்த தொழிலாளர்கள் அங்கிருந்து சத்தம் எழுப்பினர். ஆனால் அவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 

சில நொடிகளிலேயே லிஃப்ட் அங்கிருந்து வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் லிப்ட்டில் இருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தானே அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு  குறித்த கேள்விகளையும் அது எழுப்பியுள்ளது. லிப்ட் அறுந்து விழுந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்