ஊட்டியில் பரிதாபம்.. கட்டுமான பணியின் போது.. மண் சரிவு.. 6 பெண்கள் பலி.. நடந்தது என்ன?

Feb 07, 2024,06:21 PM IST

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் ஊட்டியில், வீடு கட்டுமானத்தின் போது 8 பெண்கள் மண் சரிவில் சிக்கிய நிலையில், அதில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஊட்டி காந்தி நகரில் பிஜ்ஜால் என்பவர் சொந்த வீடு கட்டி வருகிறார். இப்பகுதியில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணிகள் மும்மரமாக நடந்து வந்தது.  கட்டுமான பணியின் போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் 8 பெண்கள் மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். 




அப்போது அந்த பகுதியில் உள்ள பழைய கழிவறை ஒன்று அப்படியே இடிந்து விழுந்து மண் சரிந்தது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிக்கிக் கொண்டனர். அதில் ஆறு பேர் தற்போது பலியாகி விட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


3 பேர் மீது வழக்கு


இதற்கிடையே, இந்த அசம்பாவிதம் தொடர்பாக நில உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேரிடமும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப் பணியில் விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இறந்த பெண்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்