கோவையில்.. கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது.. ஏன்?

Nov 08, 2023,11:14 AM IST
கோவை: கோவையில் ஜூனியர் மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்ததாக, ஏழு கல்லூரி  மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி  தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் சேர்ந்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் குடிக்க பணம் கேட்டுள்ளனர் . முதலாம் ஆண்டு மாணவர் பணம் தர மறுத்துள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேர் முதலாமாண்டு மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.



பாதிக்கப்பட்ட மாணவருடைய பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மொட்டையடித்து ராகிங் செய்ததாக மாதவன், சந்தோஷ், மணி, யாலிஸ், தரணிதரன் ஐயப்பன், வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

1998 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி தமிழ்நாட்டில் ராகிங் தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை கண்டித்து தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே கல்வித்துறை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ராகிங் செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வந்தது. இதனை தடுக்க பல சட்டங்களில் இருந்தும் இது போன்ற அநாகரீக செயல்கள் அரங்கேறி வருகிறது. இச்செயல் பல உயிர்களையும் பறித்துள்ளது. இப்போதும் கூட ராகிங் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கல்லூரியும் மறைமுகமாக புகார் பெட்டி ஒன்றை வைக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் புகாரை பதிவு  செய்து ,ராகிங் செய்யும் நபரை பெற்றோர் மூலமாக கண்டித்து தக்க தண்டனை கொடுக்கலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரலாம். இது போன்ற ஐடியாக்களை கல்வித்துறை செயல்படுத்தினால் ராகிங் நடப்பதை தவிர்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்