கோவையில்.. கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது.. ஏன்?

Nov 08, 2023,11:14 AM IST
கோவை: கோவையில் ஜூனியர் மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்ததாக, ஏழு கல்லூரி  மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி  தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் சேர்ந்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் குடிக்க பணம் கேட்டுள்ளனர் . முதலாம் ஆண்டு மாணவர் பணம் தர மறுத்துள்ளார் .

இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேர் முதலாமாண்டு மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.



பாதிக்கப்பட்ட மாணவருடைய பெற்றோர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் மொட்டையடித்து ராகிங் செய்ததாக மாதவன், சந்தோஷ், மணி, யாலிஸ், தரணிதரன் ஐயப்பன், வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

1998 ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதி தமிழ்நாட்டில் ராகிங் தடுப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களை கேலி செய்வதை கண்டித்து தமிழகத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே கல்வித்துறை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ராகிங் செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வந்தது. இதனை தடுக்க பல சட்டங்களில் இருந்தும் இது போன்ற அநாகரீக செயல்கள் அரங்கேறி வருகிறது. இச்செயல் பல உயிர்களையும் பறித்துள்ளது. இப்போதும் கூட ராகிங் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் நடக்காமல் இருக்க ஒவ்வொரு கல்லூரியும் மறைமுகமாக புகார் பெட்டி ஒன்றை வைக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் புகாரை பதிவு  செய்து ,ராகிங் செய்யும் நபரை பெற்றோர் மூலமாக கண்டித்து தக்க தண்டனை கொடுக்கலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ராகிங் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரலாம். இது போன்ற ஐடியாக்களை கல்வித்துறை செயல்படுத்தினால் ராகிங் நடப்பதை தவிர்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்