28 வயது மருமகளை மணந்து.. மனைவியாக்கிய.. 70 வயது மாமனார்!

Jan 28, 2023,12:55 PM IST
கோரக்பூர், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 28 வயது மருமகளை, 70 வயது மாமனார் திருமணம்  செய்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.



மகன் இறந்து விட்ட காரணத்தால், தனது மருமகளின் சம்மதத்துடன் அவரை மணந்துள்ளார் இந்த மாமனார்.

கோரக்பூரில் உள்ள சாப்பியா உமாரோ கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ். இவர் போலீஸ்காரராக  இருந்தவர்.  இவரது மனைவி 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 3வது மகனும் சமீபத்தில் மரணமடைந்தார்.

இவரது மருமகள்தான் பூஜா. கணவரை இழந்த இவருக்கு வாழ்க்கையும், பாதுகாப்பும் தர வேண்டும் என்று விரும்பிய கைலாஷ், மருமகளையே மணக்க முடிவு செய்தார். அவரது இந்த முடிவுக்கு பூஜாவும் சம்மதித்தார். இதையடுத்து யாருக்கும் சொல்லாமல், தனது மருமகளை கல்யாணம் செய்து கொண்டார் கைலாஷ். இதுதொடர்பான புகைப்படம் வெளியே வந்த பிறகுதான் அனைவருக்கும் இவர்களது திருமணம் குறித்துத் தெரிய வந்தது.

கைலாஷ் யாதவ் தனது மருமகளையே மணந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கைலாஷின் எண்ணம் சரியானதுதான்.. ஆனால் அவரே மணந்ததற்குப் பதில், வேறு யாராவது பொருத்தமான மணமகனைப் பார்த்து கல்யாணம் செய்திருக்க வேண்டும்.. அதுதான் சரியானதாக இருந்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தத் திருமணம் குறித்து பர்ஹலாகஞ்ச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜே. என்.சுக்லா கூறுகையில், இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் எங்களது பார்வைக்கும் வந்தது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஆனால் பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக அறிகிறோம். எனவே எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்