ஆர்பிஐ அறிவிப்பு எதிரொலி.. ரூ. 2000 நோட்டுக்களை இறக்கி விட்ட சொமாட்டோ கஸ்டமர்கள்!

May 23, 2023,09:55 AM IST
மும்பை: ரூ. 2000 நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவை ரிசரவ் வங்கி அறிவித்த பிறகு தங்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ரொக்கமாகவே கட்டணங்களை செலுத்துவதாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ அறிவிப்புக்குப் பிறகு தங்களது வாடிக்கையாளர்களில் 72 சதவீதம் பேர் ரூ. 2000 நோட்டுக்கள் மூலமாகவே கட்டணம் செலுத்தியதாகவும் சொமாட்டோ தெரிவித்துள்ளது.  

மே 23ம் தேதி முதல் ரூ. 2000 நோட்டுக்களைத் திரும்பப் பெறப் போவதாக ஆர்பிஐ கடந்த 19ம் தேதி அறிவித்தது. இன்று முதல் இப்பணிகள் தொடங்குகின்றன. ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டாலும் கூடஇவை செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் சொமாட்டோ நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளது.ஆர்பிஐ அறிவிப்புக்குப் பிறகு தங்களது வாடிக்கையாளர்களில் 72 சதவீதம் பேர் cash on delivery orders முறையை தேர்வு செய்ததாகவும், அதில் ரூ. 2000 நோட்டுக்கள் மூலம் கட்டணத்தை செலுத்தியதாகவும் சொமாட்டோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒரு மீமையும் அது போட்டுள்ளது. இந்த டிவீட் தற்போது வைரலாகியுள்ளது.  இதைப் பார்த்து பலரும் ஜாலியாக கமெண்ட்டுகளைப் போட்டு வருகின்றனர். பேசாம நீங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் டை அப் வச்சுக்கங்க. அவங்களுக்கு நீங்க லன்ச் கொடுங்க.. அவங்க உங்க ரூ. 2000 நோட்டுக்களை மாற்றிக் கொடுத்துருவாங்க என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

இந்த ரூ. 2000 நோட்டுக்கள் முற்றிலுமாக புழக்கத்திலிருந்து விடுபடும் வரை ஏகப்பட்ட கலாட்டாக்கள் அரங்கேறும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்