பிஎச்டி படிப்பை.. 52 வருடமாக கற்றுத் தேறிய 76 வயது தாத்தா!

Feb 16, 2023,12:39 PM IST
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த  76 வயது முதியவர் ஒருவர், கடந்த 52 வருடத்திற்கு முன்பு பதிவு செய்த பிஎச்டி ஆய்வுப் படிப்பை இடையில் தொடராமல் விட்டு விட்டு இப்போது முடித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்.



வாழ்க்கை பூராவும் நாம் எப்போது வேண்டுமானாலும் கற்கலாம்.. கற்றலுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். ஆனால் இங்கிலாந்தில் ஒருவர் தனது வாழ்க்கை முழுவதையும் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு,  50 வருடங்களுக்குப் பிறகு ஆய்வை முடித்து அசத்தியுள்ளார்.

பிஎச்டி ஆய்வு படிப்புகள் பெரும்பாலும் ஐந்து அல்லது 6 வருடங்களில் முடிந்து விடும். அதற்கு மேல் பெரும்பாலும் ஆகாது. ஆனால் இந்த முதியவர் 1970ம் ஆண்டு பிஎச்டி படிப்பை படிக்கத் தொடங்கி தற்போதுதான் அதை முடித்துள்ளார். அதாவது 52 வருடம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த முதியவரின் பெயர் டாக்டர் நிக் ஆஸ்க்டன்.1970ம் ஆண்டு இவருக்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கணித சமூகவியல் துறையில் பிஎச்டி படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் அதைத் தொடராமல் அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் தனது படிப்பை தொடங்கினார். இம்முறை பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பிலாசபி படித்தார். அப்போது அவருக்கு வயது 69. பின்னர் அதே பிரிவில் பிஎச்டி படிக்க ஆரம்பித்து 2022ம் ஆண்டு தனது 75ம் வயதில் அதை முடித்தார்.

நேற்று முன்தினம் அதாவது பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. தனது மனைவி கிளேர் ஆக்ஸ்டன் மற்றும் 11 வயது பேத்தி பிரேயா முன்னிலையில் டாக்டர் பட்டத்தைப் பெற்றார் ஆக்ஸ்டன்.

தனது ஆய்வு குறித்து ஆக்ஸ்டன் கூறுகையில், நான்  எடுத்துக் கொண்ட தலைப்பு மிகவும் கடினமானது. 70வயதுகளில் இருக்கும் எனக்கு  ஆய்வு என்பது கஷ்டமானதுதான். ஆனால் அதை வாழ்நாள் சவாலாக எடுத்துக் கொண்டேன். 50 வருடங்களுக்கு முன்பு பிஎச்டிக்கு விண்ணப்பித்தேன். இடையில் அதை தொடர முடியாமல் போனது. இப்போது முடித்து விட்டேன் என்றார் புன்னகைத்தவாறு.

இந்த வித்தியாச (மாணவர்) குறித்து இவரது கைடாக இருந்த பேராசிரியர் சமீர் ஓகாசா கூறுகையில், நிக் மிகவும் ஆர்வமானவர். எப்போதும் எனர்ஜியாக இருப்பார். ஒரு மாணவருக்கே உரிய ஆர்வமும் தேடுதலும் அவரிடம் இருந்தது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் கழிந்து அவர் பிஎச்டி படிப்பை முடித்து  பட்டம் வாங்கியிருப்பது மிகவும் சிறப்பானது என்றார்.

சோமர்செட்டில் உள்ள வெல்ஸ் பகுதியில் தனது மனைவி, 2 குழந்தைகள், நான்கு பேரப் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆக்ஸ்டன்.

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!

news

நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்

news

வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!

news

கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

news

அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி‌.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்