புஷ்பா 2 தியேட்டர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனுக்கு.. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம்!

Dec 18, 2024,06:59 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் தரப்படுவதால் அவனது உடல் நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.


டிசம்பர் 4ம் தேதி புஷ்பா படம் திரையிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில்  எப்போதுமே நடிகர் அல்லு அர்ஜூன் தனது படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். ஆனால் புஷ்பா 2 படம் திரையிடப்பட்டபோது அவரது வருகை முதலில் அறிவிக்கப்படாமல் இருந்துள்ளது. காரணம், பெரும் கூட்டம் கூடியிருந்ததால். பின்னர் தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜூன் படம் பார்த்துள்ளார்.


அல்லு அர்ஜூனைப் பார்த்ததும் கூட்டம் முண்டியடித்தது. அவருடன் புகைப்படம் எடுக்க, செல்பி எடுக்க என கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் பலர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 மகன் தேஜ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.




தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் தேஜின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.


ஹைதராபாத்தின் கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. சிறுவனின் மூச்சுக் குழாயில் செயற்கையாக ஒரு பைப்பை பொருத்தி சுவாசத்தை எளிமையாக்கும் திட்டம் டாக்டர்களிடம் உள்ளது. அதைச் செய்தால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க முடியுமாம். சிறுவனின் மற்ற உடல் உறுப்புகள் நார்மலாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடை.யே ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் சி.வி. ஆனந்த் சிறுவனை நேரில் சந்தித்து அவனது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், சிறுவன் தேஜ் இயற்கையாக சுவாசிக்கவில்லை. மீண்டு வருவதற்கு நிறை காலம் எடுக்கும் என்றார்.


சந்தியா தியேட்டர் விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர், காவலர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அல்லு அர்ஜூன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

news

3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

கல்யாணமாகி 45 நாள்தான் ஆச்சு.. கணவர் கதையை முடித்த மனைவி.. காரணம் மாமா!

news

SORRY’மா... 'மாண்புமிகு' சொல்லல்ல செயல்.. முதல்வர் குறித்து டி.ஆர்.பி. ராஜா நெகிழ்ச்சி டிவீட்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 03, 2025... இன்று இவங்களுக்கு தான் மகிழ்ச்சியான நாள்

news

சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!

news

இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!

news

திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்

அதிகம் பார்க்கும் செய்திகள்