புஷ்பா 2 தியேட்டர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனுக்கு.. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம்!

Dec 18, 2024,06:59 PM IST

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் தரப்படுவதால் அவனது உடல் நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.


டிசம்பர் 4ம் தேதி புஷ்பா படம் திரையிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில்  எப்போதுமே நடிகர் அல்லு அர்ஜூன் தனது படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். ஆனால் புஷ்பா 2 படம் திரையிடப்பட்டபோது அவரது வருகை முதலில் அறிவிக்கப்படாமல் இருந்துள்ளது. காரணம், பெரும் கூட்டம் கூடியிருந்ததால். பின்னர் தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜூன் படம் பார்த்துள்ளார்.


அல்லு அர்ஜூனைப் பார்த்ததும் கூட்டம் முண்டியடித்தது. அவருடன் புகைப்படம் எடுக்க, செல்பி எடுக்க என கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் பலர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 மகன் தேஜ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.




தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் தேஜின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.


ஹைதராபாத்தின் கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. சிறுவனின் மூச்சுக் குழாயில் செயற்கையாக ஒரு பைப்பை பொருத்தி சுவாசத்தை எளிமையாக்கும் திட்டம் டாக்டர்களிடம் உள்ளது. அதைச் செய்தால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க முடியுமாம். சிறுவனின் மற்ற உடல் உறுப்புகள் நார்மலாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடை.யே ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் சி.வி. ஆனந்த் சிறுவனை நேரில் சந்தித்து அவனது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், சிறுவன் தேஜ் இயற்கையாக சுவாசிக்கவில்லை. மீண்டு வருவதற்கு நிறை காலம் எடுக்கும் என்றார்.


சந்தியா தியேட்டர் விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர், காவலர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அல்லு அர்ஜூன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்