அடிமாலி (கேரளா): நூடுல்ஸ் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சுத் திணறி, 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் சோஜன். இவருக்கு மனைவி ஜினாவும், மகள் ஜோவானாவும் உள்ளனர். ஜோவானாவுக்கு வயது 8. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். ஜோவானா நேற்று முன் தினம் இரவு நூடுல்ஸ் உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது நூடுல்ஸ் அந்த குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனால் ஜோவானாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, உடனே குழந்தையை அடிமாலியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகி்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காததினால் ஜேவானா பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த அடிமாலி போலீசார், விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூடுல்ஸ், சவர்மா போன்ற துரித உணவுகளால் பலர் பாதிக்கப்படுவதுடன் சிலரது உயிரும் பறிபோகும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதில் இருந்து மக்கள் தங்கள் உயிரினை காத்துக்கொள்ள இத்தகைய உணவுகளை பாதுகாப்பான முறையில் உண்ண வேண்டும். சாப்பிடும்போது குறிப்பாக நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}