சென்னை: தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது மட்டும் இன்றி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் காலங்களில் சூரியனின் வெப்பம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். இதில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு பாதுகாப்பு வழிகளை மேற்கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் வெப்பத்தில் இருந்த தப்பிக்க ஒரு வழி கிடைத்திருப்பதாக பொதுமக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதினால், சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகின்றது.
இந்த நிலையில், மழைக்குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. அதாவது, 19.2செ.மீ மழை அதிகமாகும். மார்ச் 1 முதல் தற்போது வரை இயல்பாகப் பெய்ய வேண்டி மழையின் அளவு 10 செ.மீ ஆகும். ஆனால், இயல்பை விட 9.2 சதவீதம் மழை அதிகரித்துள்ளது.
அதேசமயம், சென்னையில் இயல்பை விட 83 சதவீதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழையின் அளவு 6 செ.மீ ஆகும். ஆனால் 28 செ.மீ அதிகமாகப் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}