கங்கர், சட்டீஸ்கர்: அடடா... எவ்வவளவு சந்தோஷம் பாருங்க இந்த தாத்தா முகத்தில்.. தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாக சட்டசபை தேர்தலில் வாக்களித்து தனது உரிமையை நிலை நாட்ட போகிறார் இந்த 9 3 வயது தாத்தா.
சட்டீஸ்கர் மாநிலம் பைன்ஸ்கன்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் ஷெர்சிங் ஹெட்கோ. இந்த 93 வயதுடைய தாத்தா நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ள கன்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இது பானு பிரதாப்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமம் .
இதுவரை இவர் தேர்தலில் வாக்களித்ததே கிடையாதாம். இந்நிலையில் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக வருகிற சட்டசபை தேர்தலில் வாக்களிக்க உள்ளாராம். 2024ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக தற்போது வாக்காளர்களின் பெயர்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
வீடு வீடாக போய் விடுபட்ட வாக்காளர்களின் பெயரை சேர்க்கும் பணி இடம்பெற்று வருகிறது. ஷெர்சிங் ஹெட்கோ கிராமத்திலும் வாக்காளர்களின் பெயர்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போதுதான் இவரது பெயர் பட்டியலில் இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலாக இணைக்கப்பட்டது.
தனக்கு ஓட்டு போடும் உரிமை கிடைத்திருப்பதே இந்த தாத்தாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம் . இத்தனை காலமாக இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறமாலே இருந்து வந்தது. இந்த காரணத்தினால் தான் இவர் எந்த தேர்தலிலும் ஓட்டு போட்டதே இல்லையாம் .
தனது வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஓட்டு போடவிருப்பதால் பெரும் பரவசத்துடன் இருக்கிறாராம் தாத்தா. சூப்பர்ல!
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}