என்னது பாலத்தை காணோமா?... அதானி கிட்டயே ஆட்டய போட்டுட்டாங்கப்பா

Jul 08, 2023,12:50 PM IST

மும்பை : மும்பையில் அதானி குழுமத்தால் அமைக்கப்பட்ட 6000 கிலோ இரும்பு பாலத்தை திருடி சென்று விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 90 அடி நீளம் கொண்ட இந்த பாலம் மாலட் மேற்கு பகுதியில் இருந்து கடந்த மாதம் திருடப்பட்டது.

மும்பையின் நுல்லா பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலக்ட்ரிக் கேபிள் அமைப்பதற்காக அதானி குழுமத்தின் மின்வாரிய துறை சார்பில் பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலையான பாலம் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய இரும்பு பாலம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. மாலட் பேக் ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த பாலம் திடீரென மாயமானது. 



அந்த பகுதியில் கேமிரா ஏதும் இல்லாததால் யார் அதை திருடி சென்றார்கள் என தெரியவில்லை. ஜூன் 26 ம் தேதி அதானி எலக்ட்ரிசிட்டி சார்பில் எந்த இடத்தில் பாலம் வைக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 6 ம் தேதி அந்த பாலத்தை இப்பகுதியில் பார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.2 லட்சம் மதிப்புடைய இந்த இரும்பு பாகங்கள் அருகில் இருந்த கேமிராக்களை ஆராய்ந்ததில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

நீளமான வாகனம் ஒன்று ஜூன் 11 ம் தேதி இப்பகுதியை கடந்து சென்றதும், அதற்கு பிறகு பாலம் மாயமானதும் தெரிய வந்தது. அந்த வாகனத்தில் பதிவு எண்ணை வைத்து போலீசார் தேடி வந்தனர். கேஸ் கட்டர் மிஷின்களை ஏற்றி வந்து, இரும்பு பாலத்தை சிறிய துண்டுகளாக மாற்றி எடுத்து செல்ல சிலர் முயன்றது தெரிய வந்தது. பாலத்தை திருடியதாக நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்