மதுரை குலுங்க குலுங்க.. பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

May 05, 2023,09:13 AM IST
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் இன்று பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் ஏப்ரல் 23 ம் தேதியும், அழகர்மலை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மே 01 ம் தேதியும் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி அம்மன் கோவில் வைபவங்கள் மே 03 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அழகர்மலையில் இருந்து புறப்பட்டு வந்த கள்ளழகருக்கு நேற்று மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெற்றது. வீர ராகவ பெருமாள், கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இரவு முழுவதும் தல்லாகுளம் ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்கி இருந்து சேவை சாதித்த கள்ளழகருக்கு சித்ரா பெளர்ணமி நாளான இன்று (மே 05) காலை, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அழகர்மலையில் இருந்து தலைசுமையாக மதுரைக்கு கொண்டு வரப்பட்ட நூபுர கங்கை தீர்த்த தண்ணீரால் கள்ளழகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்க குதிரையில் ஏறி வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.

காலை 05.45 மணி முதல் 06.30 மணிக்குள் பச்சை பட்டுடுத்தி, பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். வைகை ஆற்றில் கூடி இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா" முழக்கம் விண்ணை பிளக்க, சித்திரை திருவிழா உச்சகட்ட களைகட்ட, பக்தர்கள் வெள்ளத்திற்கு இடையே,  வைகையில் பெருகி வந்த தண்ணீரில் ஆடி அசைந்து கள்ளழகர் வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 

இதைத் தொடர்ந்து கள்ளழகர், தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அங்கு மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியிலும் கள்ளழகர் எழுந்தருள் நிகழ்வும் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்