யாரைப் பார்த்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது... திமுக.விற்கு அண்ணாமலை கொடுத்த பதில்

Mar 04, 2023,03:20 PM IST
கிருஷ்ணகிரி : திமுகவினர் யாரைப் போய்ப் பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு சார்பில் திமுக.,விற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் நடந்த தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீர் குடும்பத்திற்கு முதல்வர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.



சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஓட்டு சேகரித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே தனது முதல் நோக்கம் என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை, தமிழக அசைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். 

பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டாக திமுக.,விற்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்