யாரைப் பார்த்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது... திமுக.விற்கு அண்ணாமலை கொடுத்த பதில்

Mar 04, 2023,03:20 PM IST
கிருஷ்ணகிரி : திமுகவினர் யாரைப் போய்ப் பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு சார்பில் திமுக.,விற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் நடந்த தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீர் குடும்பத்திற்கு முதல்வர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.



சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஓட்டு சேகரித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே தனது முதல் நோக்கம் என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை, தமிழக அசைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். 

பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டாக திமுக.,விற்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !

news

இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு

news

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!

news

Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

news

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!

news

தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி

news

வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்