யாரைப் பார்த்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது... திமுக.விற்கு அண்ணாமலை கொடுத்த பதில்

Mar 04, 2023,03:20 PM IST
கிருஷ்ணகிரி : திமுகவினர் யாரைப் போய்ப் பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு சார்பில் திமுக.,விற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் நடந்த தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீர் குடும்பத்திற்கு முதல்வர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.



சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஓட்டு சேகரித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே தனது முதல் நோக்கம் என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை, தமிழக அசைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். 

பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டாக திமுக.,விற்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்