யாரைப் பார்த்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது... திமுக.விற்கு அண்ணாமலை கொடுத்த பதில்

Mar 04, 2023,03:20 PM IST
கிருஷ்ணகிரி : திமுகவினர் யாரைப் போய்ப் பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு சார்பில் திமுக.,விற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் நடந்த தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீர் குடும்பத்திற்கு முதல்வர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.



சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஓட்டு சேகரித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே தனது முதல் நோக்கம் என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை, தமிழக அசைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். 

பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டாக திமுக.,விற்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்