பாஜக கொண்டு வந்த திட்டங்கள் சரியில்லாவிட்டால் தூக்கி எறியப்படும்.. கர்நாடக அமைச்சர்!

Jun 07, 2023,10:23 AM IST
டெல்லி:  கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த பாஜக அரசு கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்கள், மக்களுக்கு பயன் உள்ளதாக இல்லாவிட்டால், அவை நீக்கப்படும் என்று கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவிக்கு பிரியங்க் கார்கே ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்ட பசு வதைத் தடுப்புச் சட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமைந்து விட்டது. இதனால் மாநிலத்தின் மீது பெரும் நிதிச்சுமை இறங்க வழி வகுத்து விட்டது. 



பசு வதைச் சட்டம் மட்டுமல்லாமல், ஹிஜாப் தடை என எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கும், சமூக வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவாததாக இருந்தால் நிச்சயம் நீக்கப்படும்.  காங்கிரஸ் ஆட்சி, பொருளாதாரத்தை மட்டுமே பார்க்கிறது. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை.

நாக்பூரில் உள்ள தங்களது முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது பசுவதைத் தடுப்புச் சட்டம். அது கால்நடை விவசாயிகளையோ அல்லது தொழில்துறையினரையோ எந்த வகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அவர்களுக்கு இதனால் எந்த லாபமும் கிடைக்கவும் இல்லை.

நிச்சயம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாங்கள் மறு ஆய்வு செய்வோம். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை அப்படியே ஏற்க முடியாது என்றார் கார்கே. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவின் மகன்தான் பிரியங்க் கார்கே என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?

news

எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

காற்று

news

தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்