புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பற்றி லண்டனில் பேசிய கருத்திற்கு இந்திய அரசும், எம்பி.,க்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லோக்சபாவில் இது தொடர்பாக அமளி வெடித்தது. ராகுல் காந்தியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ராகுல் காந்தியின் பேச்சால் ஏற்பட்ட அமளியால் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியில் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்திய பேசிய விவகாரத்தை கையில் எடுத்து, அதானி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ஆளும் பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ராகுல் காந்தி அப்படி என்ன தான் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், பண மதிப்பிழப்பு முடிவானது இந்தியாவின் நிதி நிலையை பேரழிவுக்கு கொண்டு சென்று விட்டது. அது பற்றி பேச எங்களை அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டி பற்றி பேசவும் எங்களை அனுமதிக்கவில்லை. சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது பற்றியும் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை.
பார்லிமென்ட்டில் இது பற்றி சூடான விவாதங்கள், அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றது. இருந்தாலும் நாங்கள் பார்லிமென்ட்டில் பேசியது நினைவில் உள்ளது. ஆனால் எங்களால் முடிவை பெற முடியவில்லை. ஒரு விவாதத்தில் துவங்கி, வேறு ஒரு விவாதமாக அது மாறி தான் போய் உள்ளது. பார்லிமென்ட்டில் எங்களின் மைக்குகள் நன்றாக இருக்கும். ஆனால் எங்களால் அதை ஆன் செய்து பேச முடிவதில்லை. பலமுறை நான் முயற்சி செய்தும் அது நடந்தது இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை பலமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் இது பற்றி நடந்தது இல்லை என ராகுல் பேசினார்.
அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியது முற்றிலும் தவறானது என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து கொண்டிருக்கின்றன. சோனியா காந்தி, தனது மகனை அடக்கி வைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனாலும் பாஜக அரசு பிரச்சனைகளை திசை திருப்ப பேசுவதாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க காங்கிரஸ் கட்சி தலைவர் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}