ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கனும்...கொந்தளிக்கும் பார்லிமென்ட்...அப்படி என்ன தான் பேசினார்?

Mar 13, 2023,12:55 PM IST

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா பற்றி லண்டனில் பேசிய கருத்திற்கு இந்திய அரசும், எம்பி.,க்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லோக்சபாவில் இது தொடர்பாக அமளி வெடித்தது. ராகுல் காந்தியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ராகுல் காந்தியின் பேச்சால் ஏற்பட்ட அமளியால் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியில் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்திய பேசிய விவகாரத்தை கையில் எடுத்து, அதானி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ஆளும் பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ராகுல் காந்தி அப்படி என்ன தான் பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், பண மதிப்பிழப்பு முடிவானது இந்தியாவின் நிதி நிலையை பேரழிவுக்கு கொண்டு சென்று விட்டது. அது பற்றி பேச எங்களை அனுமதிக்கவில்லை. ஜிஎஸ்டி பற்றி பேசவும் எங்களை அனுமதிக்கவில்லை. சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது பற்றியும் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. 



பார்லிமென்ட்டில் இது பற்றி சூடான விவாதங்கள், அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றது. இருந்தாலும் நாங்கள் பார்லிமென்ட்டில் பேசியது நினைவில் உள்ளது. ஆனால் எங்களால் முடிவை பெற முடியவில்லை. ஒரு விவாதத்தில் துவங்கி, வேறு ஒரு விவாதமாக அது மாறி தான் போய் உள்ளது. பார்லிமென்ட்டில் எங்களின் மைக்குகள் நன்றாக இருக்கும். ஆனால் எங்களால் அதை ஆன் செய்து பேச முடிவதில்லை. பலமுறை நான் முயற்சி செய்தும் அது நடந்தது இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை பலமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் இது பற்றி நடந்தது இல்லை என ராகுல் பேசினார்.


அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியது முற்றிலும் தவறானது என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து கொண்டிருக்கின்றன. சோனியா காந்தி, தனது மகனை அடக்கி வைக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனாலும் பாஜக அரசு பிரச்சனைகளை திசை திருப்ப பேசுவதாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க காங்கிரஸ் கட்சி தலைவர் அவ்வப்போது கூடி ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.


சமீபத்திய செய்திகள்

news

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி

news

ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்

news

மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்

news

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

news

விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

news

திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!

news

எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்