அப்படியெல்லாம் விட்டுட்டுப் போய்ர முடியாது.. கிப்ட் வச்சுருக்கேன்.. தோனி செம இன்ஃபோ!

May 30, 2023,09:51 AM IST
அகமதாபாத்: ஐபிஎல்லுக்கு குட் பை சொல்ல இதுதான் சரியான நேரம். பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் உடனே முடிவெடுத்து விட முடியாது. சில மாதங்கள் பார்க்க வேண்டும்.. ரசிகர்களுக்கு கிப்ட் தரவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக தொடர்ந்து கோலோச்சி வரும் தோனி இந்தியா முழுவதும் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அன்பை வாரிக் குவித்து வைத்துள்ள வீரர் என்றால் அது தோனிதான்.



நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும், சிஎஸ்கே ரசிகர்கள்தான் மிகப் பெரியஅளவில் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேரும் உச்சரித்த ஒரே வார்த்தை தோனி தோனி தோனி மட்டுமே. காரணம், இந்த சீசனுடன் ஐபிஎல்லை விட்டு தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று பரவிய தகவல்தான். அதுகுறித்து மறுப்பும் சொல்லாமல் ஆமாம் என்றும் சொல்லாமல் தோனி மெளனப் புன்னகை பூத்து வந்ததால் ரசிகர்கள் ரொம்பவும் வெறியாகி விட்டனர். என்னமோ நடக்கப் போகுதுடா என்ற பரபரப்பிலையே மைதானத்தை நிரப்பி வந்தனர்.

நேற்றும் கூட இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தை முழுக்க ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் சென்னை ரசிகர்கள்தான். தோனிக்காக கூடிய கூட்டம் இது. இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரசிகர்களுக்கு சூப்பரான ஒரு செய்தியை வெளியிட்டார் தோனி. போட்டி முடிவில் தோனி பேசும்போது கூறியதாவது:

பதில் வேண்டுமா (ஓய்வு குறித்து).. சூழ்நிலைப்படி பார்த்தால் இதுதான் சிறந்த நேரமாக தோன்றும். ஆனால் இந்த முறை நான் போன இடங்களில் எல்லாம் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் மிகப் பெரியது. தேங்க்யூ சோ மச் என்று ஈஸியாக கூறி விட்டு போய் விடலாம்.. ஆனால் அது கடினமானது.  எல்லாம் உடம்பு ஒத்துழைப்பதைப் பொறுத்து இருக்கிறது. 6-7 மாதங்கள் ஆகும் முடிவெடுக்க.. இது ரசிகர்களுக்கு எனது கிப்ட்டாகக் கூட இருக்கும்.  அவர்களது அன்பை நிராகரித்து விட்டுப் போவது மிகக் கடினம், ஈஸியானதல்ல. அந்த அன்பும், பாசமும் எனக்குத் தேவை.

எனக்கு கண்ணெல்லாம் குளமாயிப் போயிருக்கு. அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இதைக் கொண்டாட வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.  நான் நானாக இருப்பதால்தான் இத்தனை அன்பை அவர்கள் என் மீது கொட்டுகிறார்கள். நான் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பதை அவர்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள். அதை நான் மறுக்க விரும்பவில்லை. மீற விரும்பவில்லை.  சிம்பிளாக இருக்கவே முயற்சிக்கிறேன். காரணம் அது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.

இது 5வது கோப்பை. ஆனால் ஒவ்வொரு கோப்பையும் விசேஷமானது.  ஐபிஎல்லின் விசேஷமே என்னவென்றால் ஒவ்வொரு போட்டிக்கும் நீங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்  என்றார் தோனி.

அவர் சொல்வதைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்த சீசனிலும் வந்து கலக்குவார் என்றே தெரிகிறது.. என்ன ரசிகர்களே ஹேப்பிதானே..!

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்