ஈரோடு இடைத்தேர்தல்...தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Feb 21, 2023,02:54 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பல விதமான முறைகேடுகள் நடக்கிறது என எதிர்க்கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலவிதமான புகார்களை தெரிவித்து வந்தனர். இதற்கு திமுக தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டு வந்தது.




இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார்களை விசாரிக்க ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அப்படி குழு அமைக்கப்படும் வரை ஈரோடு தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றுமண சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவையும் அமைக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 21) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், இதே போன்ற வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்