சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் வசதி அறிமுகம்

Apr 13, 2023,03:00 PM IST
சென்னை : சென்னையில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் சேவை முதல் கட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக  ஆயிரம் விளக்குல, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், எழும்பூர் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ பைக் இணைப்பு வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து இந்த சேவையை துவக்கி வைத்தார்.



மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக, பெண்களால் இயக்கப்படும் ரேபிடோ சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார். மேலும் மதுரையில் ரேபிடோ ஆப் மூலம் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரேபிடோ பைக் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்