சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

Jun 20, 2023,12:38 PM IST
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நீர்மட்டம் நெருங்கி உள்ளது. 



மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி ஓரிரு நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம் கலெக்டர் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

மழை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்தால் எந்த நேரத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மற்ற ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்