சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

Jun 20, 2023,12:38 PM IST
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நீர்மட்டம் நெருங்கி உள்ளது. 



மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி ஓரிரு நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம் கலெக்டர் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

மழை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்தால் எந்த நேரத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மற்ற ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்