சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

Jun 20, 2023,12:38 PM IST
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நீர்மட்டம் நெருங்கி உள்ளது. 



மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி ஓரிரு நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம் கலெக்டர் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

மழை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்தால் எந்த நேரத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மற்ற ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்