மீண்டும் வேலையை காட்டும் சீனா? புதிய வரைபடத்தால் கிளம்பிய பரபரப்பு

Aug 29, 2023,11:40 AM IST
டில்லி : அருணாச்சல பிரதேசத்தை சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் மீண்டும் இரு நாடுகள் இடையேயான உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா அந்த வரைபடத்தில் சேர்த்து வெளியிட்டுள்ளது. தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்த்துள்ளது.



சமீபத்தில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீண்டும், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு திபெத், அக்சய் சீன் ஆகியன 1962 ம் ஆண்டு போரின் போது சீனா கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

வியட்நாம்,  பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும் தென் சீன கடல் பகுதிகளை தங்களுக்கு உரியதாக சொல்லி வரும் நிலையில் சீன அதை தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டதாக குறிப்பிட்டு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தை சீனாவின் புள்ளியியல் கணக்கெடுப்பு மற்றும் வரைபட தினத்தை முன்னிட்டு சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன பிரதம் ஷின் ஜிங்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறி இருந்தார். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்