காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து நடந்தபோது.. என்ன சொன்னோம் தெரியுமா?.. ராகுல் காந்தி

Jun 05, 2023,12:38 PM IST
நியூயார்க்: காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து  நடந்தபோது நாங்கள் பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டவில்லை. மாறாக நாங்களே பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் ரயில்வே அமைச்சர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க்கில் நடந்த இந்தியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது ஒடிஷா ரயில் விபத்து குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



ராகுல் காந்தி பேசுகையில்,  காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு ரயில் விபத்து நடந்தது. அப்போது நாங்கள், பிரிட்டிஷ் அரசுதான் இதற்குக் காரணம் என்று  கூறவில்லை. மாறாக அப்போதைய ரயில்வே அமைச்சர், இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறி ராஜினமா  செய்தார்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது.. நாம் பல்வேறு காரணங்களைக் கூறுகிறோம்.. பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறோம், ஏற்க மறுக்கிறோம். இதுதான் நமது பிரச்சினை என்றார் ராகுல் காந்தி.

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ரயில்வே அமைச்சகம் கவச் திட்டத்தை செயல்படுத்ததாதே விபத்துக்குக் காரணம். ரயில்களில் விபத்து தடுப்பு கருவிகளை நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அமல்படுத்தினேன். அதை ரயில்வே தற்போது பயன்படுத்துவதில்லை. அதுவே விபத்துக்குக் காரணம் என்று அமைச்சர் அஸ்வனி முன்பாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும்  இந்த சமயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இந்தக் கோரிக்கைகளை பாஜகவும், மத்தியஅரசும் நிராகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்