காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து நடந்தபோது.. என்ன சொன்னோம் தெரியுமா?.. ராகுல் காந்தி

Jun 05, 2023,12:38 PM IST
நியூயார்க்: காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து  நடந்தபோது நாங்கள் பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டவில்லை. மாறாக நாங்களே பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் ரயில்வே அமைச்சர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க்கில் நடந்த இந்தியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது ஒடிஷா ரயில் விபத்து குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



ராகுல் காந்தி பேசுகையில்,  காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு ரயில் விபத்து நடந்தது. அப்போது நாங்கள், பிரிட்டிஷ் அரசுதான் இதற்குக் காரணம் என்று  கூறவில்லை. மாறாக அப்போதைய ரயில்வே அமைச்சர், இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறி ராஜினமா  செய்தார்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது.. நாம் பல்வேறு காரணங்களைக் கூறுகிறோம்.. பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறோம், ஏற்க மறுக்கிறோம். இதுதான் நமது பிரச்சினை என்றார் ராகுல் காந்தி.

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ரயில்வே அமைச்சகம் கவச் திட்டத்தை செயல்படுத்ததாதே விபத்துக்குக் காரணம். ரயில்களில் விபத்து தடுப்பு கருவிகளை நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அமல்படுத்தினேன். அதை ரயில்வே தற்போது பயன்படுத்துவதில்லை. அதுவே விபத்துக்குக் காரணம் என்று அமைச்சர் அஸ்வனி முன்பாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும்  இந்த சமயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இந்தக் கோரிக்கைகளை பாஜகவும், மத்தியஅரசும் நிராகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

news

ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்

news

தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?

news

சிலிண்டர் தட்டுப்பாடு...பிரதமர் மோடி பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்

news

வாட்ஸ் அப்தான் கையில் இருக்கே.. இனி ஈஸியாக ஆம்புலன்ஸை அழைக்கலாம்..!

news

திருச்சி சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா அல்லது பச்சை பட்டினி விரதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்