டெல்லி: ஒடிஷாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று ரயில்வே சந்தேகப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், விபத்து நடந்ததற்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிமினல் வேலையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ரயில்வே வாரியம், சிபிஐ விசாரணை கோரியுள்ளது.
இந்த ரயில் விபத்துக்கு சதி வேலையே காரணமாக இருக்கும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில்கள் வருவதை கண்டறிய உதவும் "எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்" ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விபத்து நேரிட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275தான் என்றும் ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது. இதில் 187 உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இவர்களை உறவினர்களிடம் கொடுப்பதற்காக பாதுகாப்பாக அரசு வைத்துள்ளது. 110 உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்துள்ளனர். மற்ற உடல்கள் அம்ரி மருத்துவமனை, கேபிடல், சம் ஹாஸ்பிட்டல் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.
2 ரயில் பாதைகள் சீரமைப்பு
விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. தற்போது 2 பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று கிழக்கு மற்றம் தென் இந்தியாவை இணைக்கும் மெயின் டிரங்க் லைன் ஆகும்.
மின்சார கேபிள்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அது சரியாகும் வரை இந்தப் பகுதியில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கேபிள்களை சரி செய்ய 3 நாட்களாகலாம்.
விபத்து காரணமாக இப்பாதையில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 125 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 56 ரயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. 10 ரயில்களின் பாதை சுருக்கப்பட்டுள்ளன. 14 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இடம் பெயர் தொழிலாளர்கள்தான். வேலைக்காக சென்னை, பெங்களூர் கிளம்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களும் கூட. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}