டிஐஜி விஜயக்குமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை.. பாஜக கோரிக்கை!

Jul 07, 2023,10:02 AM IST
சென்னை: கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயக்குமார் தற்கொலை செய்து கொண்டது வியப்பளிக்கிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் சரக டிஐஜியாக இருந்து வந்தவர் விஜயக்குமார். கடந்த ஜனவரி மாதம்தான் இந்தப் பொறுப்புக்கு அவர் வந்திருந்தார். சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் இன்று காலை தனது முகாம் அலுவலகம் வந்தார். அங்கு அறையைப் பூட்டிக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.



இந்தநிலையில், விஜயக்குமார் மரணம் குறித்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்  அவர் கூறியிருப்பதாவது:

கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது.  

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல்  அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Elon Musk: உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை முறை பற்றி தெரியுமா?

news

அமெரிக்காவின் இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

news

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்.. டிரம்ப் தகவல்.. திட்டவட்டமாக மறுத்தது ஈரான்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 24, 2025...அதிர்ஷ்டம் பெற போகும் 4 ராசிகள்

news

55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. மதுரை உள்பட 9 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம்!

news

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

news

4 மாநில சட்டசபை இடைத்தேர்தல் முடிவு : பாஜகவுக்குப் பின்னடைவு.. துளிர்த்த ஆம் ஆத்மி, காங்கிரஸ்!

news

சூர்யா 45 படத்தின் கதை என்னவா இருக்கும்.. கருப்பு டைட்டிலை இப்போதே கொண்டாடும் ரசிகர்கள்!

news

ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்