பொது சிவில் சட்டம்... "முதலில் இந்து மதத்தில் அமல்படுத்துங்கள்".. திமுக எம்.பி. பேச்சு

Jun 28, 2023,10:10 AM IST

சென்னை: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தால் அதை முதலில் இந்துக்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடந்த பாஜககூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து விவரித்தார். முஸ்லீம் பெண்கள் படும் சிரமங்களையும், அநீதிகளையும் அவர் விளக்கிப் பேசினார்.  ஒரே நாட்டில் எப்படி இரண்டு வகையான சட்டம் இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



பிரதமர் மோடியின் பேச்சு விவாதங்களை கிளப்பியுள்ளது. திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.   டிகேஎஸ் இளங்கோவன் இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறியதாவது:

முதலில் பொது  சிவில் சட்டத்தை இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்துவும் நாட்டின் எந்தக் கோவிலிலும் பூஜை செய்ய  அனுமதிக்கப்பட வேண்டும்.  எங்களுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. அரசியல்சாசனம் கொடுத்துள்ள உரிமைகளை நாம் முதலில் காக்க வேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் அரசியல்சாசனம் பாதுகாப்பு கொடுக்கிறது. அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, முதலில் மோடி வறுமை குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கட்டும். விலைவாசி உயர்வு குறித்து பேசட்டும். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசட்டும். அவர் மணிப்பூர் குறித்துப் பேச மாட்டார். மொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. ஆனால் இதிலிருந்தும், பிற பிரச்சினைகளிலிருந்தும் மக்களை திசை திருப்ப முயல்கிறார் பிரதமர் என்றார் வேணுகோபால்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்