டெலிவரி ஊழியர் மீது வெறியுடன் பாய்ந்த டாபர்மேன்.. 3வது மாடியிலிருந்து குதித்து படுகாயம்!

May 23, 2023,01:13 PM IST
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமேசான் டெலிவரி ஊழியர் மீது டாபர்மேன் நாய் வெறியுடன் கடிக்கப் பாய்ந்ததால், அவர் பயந்து போய் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார்.

ஹைதராபாத்தின் மணிகொண்டா என்ற பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் மிகக் குறுகிய காலத்தில் இதுபோல டெலிவரி ஊழியர்கள் மீது நாய்கள் பாயும் 3வது சம்பவம் இது. வீடுகளில் நாய்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைக்காமல் விடுவதால் இதுபோல சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணிகொண்டாவில் உள்ள பஞ்சவாடி காலனியில் உள்ள ஒரு வீட்டினர் அமேசானில் பொருள் ஆர்டர் செய்திருந்தனர். அந்தப் பொருளை கொடுப்பதற்காக அமேசான் டெலிவரி ஊழியர் வந்திருந்தார். அப்போது வீட திறந்து கிடந்தது. காலிங் பெல்லை அடித்து விட்டு ஊழியர் காத்திருந்தபோது, வீட்டுக்குள்ளே இருந்து டாபர்மேன் நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து ஊழியர் மீது பாய்ந்தது.



நாய் திடீரென வந்து பாய்ந்ததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் அந்த நாயிடமிருந்து தப்ப 3வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படவே அங்கிருந்தோர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் நாம் நாய்களைக் குறை சொல்ல முடியாது. அவற்றுக்கு அந்நியர் யாரேனும் வீட்டுக்கு வந்தால் அவர்களைப் பார்த்த குரைக்கவும், தடுக்கவும், தாக்கவும்தான் தெரியும். அதுதான் அவற்றின் கடமை. அவற்றின் கடமையை நாய்கள் சரியாக செய்கின்றன. ஆனால் வீட்டில் இருப்போர்தான் கவனமாக இருக்க வேண்டும். முறையாக நாய்களை கட்டிப் போட்டிருக்க வேண்டும் அல்லது அந்நியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இடத்தில் நாய்களை வைத்திருக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்