தலைநகரை தலைகீழாக்கிய மழை, வெள்ளம்...நமக்கு சொல்லும் பாடம் என்ன?

Jul 18, 2023,02:30 PM IST
டில்லி : வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வெள்ளம் நமக்கு சொல்லும் பாடம் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

தலை நகர் டெல்லியை பெரிதும் அச்சுறுத்திய மழையில் யமுனையில் கரைபுரண்டோடி பல மக்களை இயல்பு வாழ்க்கைக்கு செல்ல விடாமல் தவிக்க வைத்தது . கடந்த பல வருடங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இது பெரிதாக பார்க்கப்படுகிறது . இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

தற்போதைய நிலைமையாக  திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் யமுனையின் நீர்மட்டம் டெல்லியில் 206.01 மீட்டராகப் பதிவாகியுள்ளது, முன்னதாக திங்கட்கிழமை காலை யமுனையின் நீர்மட்டம் 205.48 மீட்டரை தாண்டியது. தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையிலும், இது அபாயக் குறியான 205.33 மீட்டரை விட சற்று அதிகமாக இருந்தது.

வெள்ளம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான மடாலய சந்தை, கடைக்காரர்கள் தங்கள் கடைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளது அவர்கள்  மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது பெரிய சவாலாக இருப்பது நீர் வழி பரவும் நோய் தொற்றுகள் தான். வெள்ளத்தினால் இயல்பாக நோய்த்தொற்று உருவாகாமல் நோய்கள் பரவாமல் இருக்க, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தடுப்பு பணியை மேற்கொள்ளுமாறு டெல்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பள்ளி சீருடைகள் மற்றும் புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்படும் வரை அவை இல்லாமல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அ��ுத்த 4-5 நாட்களுக்கு டெல்லியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது உள்ளூர் மழையால் அல்ல, மாறாக யமுனை நதிக்கு, இமாச்சல் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிக தண்ணீர் வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

தமிழ்நாடு 2015 ல் பெரு மழையில் பாதிக்கப்பட்டது. அப்போது சென்னை மக்கள் பட்ட பாட்டை மறந்திருக்க முடியாது . நாமும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மை.டெல்லி நமக்கு சொல்லும் பாடம் அது தான். வருமுன் காப்பதே நலம் .

சமீபத்திய செய்திகள்

news

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை

news

தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை

news

இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்

news

Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!

news

கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?

news

சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!

news

Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!

news

இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is

அதிகம் பார்க்கும் செய்திகள்