பாதிப் பேருக்கு சம்பளமே இன்னும் வரலை.. பரிதவிக்கும் டன்ஸோ ஊழியர்கள்

Jul 11, 2023,03:48 PM IST
டெல்லி: டன்ஸோ ஊழியர்கள் பாதிப் பேருக்கு மேல் இன்னும் ஊதியம் பெறாமல் சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மற்றும் கூகுள் ஒருங்கிணைப்புடன் இயங்கி வரும் டெலிவரி ஆப்பான டன்ஸோவில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிப் பேருக்கு இன்னும் ஜூன் மாத சம்பளம் வரவில்லையாம். கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் சம்பளம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.



இந்த சம்பள தாமதம் நிறுவனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டன்ஸோ நிர்வாகம் கருதுகிறதாம். ஆனால் வேறு வழியில்லாமல்தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அது சொல்கிறது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் டன்ஸோ நிறுவனம் பாதி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது. மேலும் பல்வேறு நிதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அது முடுக்கி விட்டது. அதேசமயம் கடந்த ஏப்ரல் மாதம் அது 75 மில்லியன் டாலர் நிதியையும் திரட்டியது. இப்படி நடவடிக்கை எடுத்தும் கூட பாதி ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலையில் டன்ஸோ இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்