அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Jun 13, 2023,11:44 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



5 வானங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் வீட்டிலேயே சோதனை நடந்து வருகிறது.

இதனால் விரைவில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நேரடி விசாரணையை துவக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு புறம் திமுக.,வில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அமலாக்கத்துறையின் பிடியில் அவர் சிக்கி உள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

அதிகம் பார்க்கும் செய்திகள்