அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Jun 13, 2023,11:44 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



5 வானங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் வீட்டிலேயே சோதனை நடந்து வருகிறது.

இதனால் விரைவில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நேரடி விசாரணையை துவக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு புறம் திமுக.,வில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அமலாக்கத்துறையின் பிடியில் அவர் சிக்கி உள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!

news

கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக

news

ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!

news

AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!

news

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்

news

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள்.. 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றம்!

news

அன்புள்ள மான்விழியே.. கடிதம் வாயிலாக காதலைத் தீட்டிய தமிழ்த் திரைப் பாடல்கள்!

news

திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வலுவாக உள்ளது.. திருமாவளவன் திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்