அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

Jun 13, 2023,11:44 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



5 வானங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் வீட்டிலேயே சோதனை நடந்து வருகிறது.

இதனால் விரைவில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நேரடி விசாரணையை துவக்கலாம் என சொல்லப்படுகிறது. ஒரு புறம் திமுக.,வில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அமலாக்கத்துறையின் பிடியில் அவர் சிக்கி உள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை

news

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

news

பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

news

நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்

news

ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்

news

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!

news

மர்ம நபரால் பரபரப்பு... தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை!

news

ஒருவர் மயங்கி விழுந்தால் உடனடியாக என்ன செய்யணும்னு உங்களுக்குத் தெரியுமா?

news

புதிய ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்