ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருத்தர் போதும் ஓட்டு எங்களுக்கு தான்... காங்.ஐ கலாய்த்த அண்ணாமலை

Feb 09, 2023,03:35 PM IST
சென்னை : கடந்த தேர்தலில் ராகுல் காந்தி எங்களை வெற்றி பெற வைத்ததை போது,  இந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருவர் போதும். அவர் பேசினாலே எங்களுக்கு ஓட்டு வந்து விடும் என காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



சென்னையில் இன்று மரம் நடுவிழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அண்ணாமலை, கடந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் ராகுல் காந்தி. அது போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் பிரச்சார பீரங்கி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான். அவர் மட்டும் பேச ஆரம்பித்தால் போதும். தானாக எங்களுக்கு ஓட்டு வந்துவிடும். தமிழகத்தில் ஆளுங்கட்சி பயத்தில் உள்ளது.

அதனால் தான் திமுக., ஒட்டுமொத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி உள்ளது. இல்லா விட்டால் இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கு எதற்காக இத்தனை அமைச்சர்களை நியமித்துள்ளது. தமிழகம் - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்றார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் சரி பார்க்கப்பட்டு, ஈரோடு இடைத்தேர்தலில் 82 பேர் இறுதி வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்