சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 வது முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் தங்கம் விலை இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் நிலவும் சரிவு காரணமாக, பெரும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.

போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதும் தங்கத்தின் விலை உயர ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த போர் பதற்றம் நீடித்தால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நகை வியாபாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று காலையில் சவரனுக்கு ரூ.2400 அதிகரித்திருந்த தங்கம் விலை இன்று பிற்பகலில் 2வது முறையாக சவரனுக்கு 2,800 உயர்ந்துள்ளது. காலை, பிற்பகல் என இரண்டு நேரங்களையும் சேர்ந்து இன்று மட்டும் நகை விலை ரூ.5,200 உயர்ந்துள்ளது.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}