சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 வது முறை தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் தங்கம் விலை இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக உலகளாவிய சந்தையில் பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் நிலவும் சரிவு காரணமாக, பெரும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர்.

போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதும் தங்கத்தின் விலை உயர ஒரு மறைமுகக் காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த போர் பதற்றம் நீடித்தால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நகை வியாபாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று காலையில் சவரனுக்கு ரூ.2400 அதிகரித்திருந்த தங்கம் விலை இன்று பிற்பகலில் 2வது முறையாக சவரனுக்கு 2,800 உயர்ந்துள்ளது. காலை, பிற்பகல் என இரண்டு நேரங்களையும் சேர்ந்து இன்று மட்டும் நகை விலை ரூ.5,200 உயர்ந்துள்ளது.
களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!
Iran Attack: புரட்டி எடுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்.. அலி கமேனிக்கு ஏதாவது நடந்தால்.. அடுத்து என்ன?
ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
வெயில் தீவிரம்: பட்டாசு ஆலை, பெட்ரோல் பங்குகளை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்:செல்வப்பெருந்தகை
போர் பதற்றம்: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5200 உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை
{{comments.comment}}