ரம்ஜான் 2023 நல்வாழ்த்துக்கள் : சவுதி அரேபியாவில் இன்று.. இந்தியாவில் ரம்ஜான் எப்போது?

Apr 21, 2023,01:23 PM IST
சென்னை : ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வருவது ரமலான் மாதம். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைவனால் முகம்மது நபிகள் பெருமானாருக்கு அருளப்பட்டது. இதனால் ரமலான் மாதத்தில் இறைவனின் அருளை பெறுவதற்காக இஸ்லாமியர்கள் கடுமையான நோன்பு கடைபிடிப்பதையும், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 29 அல்லது 30 நாட்களைக் கொண்ட ரமலான் மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் நோன்பினை துவக்கி, பகல் பொழுது முழுவதும் தண்ணீர், உணவு எடுத்துக் கொள்ளாமல், தொழுகை, திருக்குரான் வாசிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டு இறை சிந்தனையிலேயே இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஃப்தார் விருந்துடன் நோன்பு திறப்பதை இஸ்லாமியர்கள் மேற்கொள்கிறார்கள்.



ரமலான் மாதம் நிறைவடைந்து பத்தாவது மாதமான ஷாவ்வல் மாதத்தின் துவக்க நாளில் நோன்பினை நிறைவு செய்து, அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ரமலான் மாதம் பிறை தெரிவதன் அடிப்படையில் கணக்கிட்டு துவங்கப்படுகிறது. பிறை தெரிவதில் துவங்கி, மீண்டும் பிறை தெரியும் வரை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. பிறை தெரிவதன் அடிப்படையிலேயே ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரமலான் மாதம் மார்ச் 24 ம் தேதி துவங்கியது. 

பிறை என்பதை வெறும் கண்களால் காண முடியாது. டெலஸ்கோப் போன்ற கருவிகளைக் கொண்டே காண முடியும். ஆனால் தலைமை ஹாஜி அல்லது இஸ்லாமிய அமைப்புக்கள் பிறை தெரிந்ததாக அறிவிப்பதை வைத்தே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி பிறை தெரியவில்லை. இதனால் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட உள்ளது, ரம்ஜான் விடுமுறையை எந்த நாளில் அறிவிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் முதல் ஆளாக பிறை தெரிந்ததாக சவுதி அரேபியாவில் தலைமை ஹாஜி அறிவித்தார். இதனையடுத்து சவுதி அரேபியா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகள், இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 21 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய நாடுகளில் ஓமனில் மட்டும் ஏப்ரல் 21 ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 22 ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை இஃப்தார் விருந்துடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில், அனைவரும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!

news

கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்