ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. இன்று "பணம் + பரிசு மழை".. நாளை வாக்குப் பதிவு!

Feb 26, 2023,11:05 AM IST

ஈரோடு:  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுகளும் தருவது கொஞ்சம் கூட குறையவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.


அனல் பறக்க நடந்து வந்து தேர்தல் பிரச்சாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களைக் கவர சரமாரியாக பணத்தை இறக்கி விட்டன. இதில் திமுகவின் பங்குதான் அதிகம் என்று சொல்கிறார்கள். மொத்த அமைச்சர்களையும் திமுக களத்தில் இறக்கியுள்ளது. போதாக்குறைக்கு சென்னை மாநகர மேயர் பிரியாவையும் கூட்டி வந்து பிரச்சாரம் செய்தனர்.


திமுக இந்த வெற்றியை தனது வெற்றியாகவும், ஆட்சிக்கு களங்கம் வந்து விடக் கூடாது என்பது போலவும் பார்க்கிறது. அதிமுகவோ, தனது பலத்தை நிரூபிக்க துடிக்கிறது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சியும் தன் பங்குக்கு போட்டியைக் கடுமையாக்கியுள்ளது. திமுகவுக்கும்,நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கடும் மோதலும் கூட தொகுதியில் மூண்டது. சீமானின் பேச்சுக்களால் அருந்ததியினர் சமுதாயத்தினரும் கடும் கோபமடைந்தனர்.


இப்படி அனல் பறக்க நடந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆனாலும் பண மழை இன்னும் ஓயவில்லையாம்.. பரிசு மழையும் அடங்கவில்லையாம். கொலுசு, மூக்குத்தி, பரிசு டப்பா, சேலை, வேட்டி என்று சரமாரியாக திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்குக் கொடுத்து வருகின்றனர். இரு கட்சியினரும் டோக்கன்கள் கொடுத்து பரிசுப் பொருட்களைக் கொடுக்கிறார்களாம். இதை  வாங்க மக்களும் முண்டியடிப்பதாக சொல்லப்படுகிறது.


ஈரோடு கிழக்கு.. குடிமகன்களுக்கு பேட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு!


இப்படிப்பட்ட கொடுமையான சூழலில்தான் நாளை தேர்தல் நடைபெறப் போகிறது. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் ஆவர். இதில் ஆண்  வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 ஆகும். அதாவது பெண் வாக்காளர்களே அதிகம். இதனால்தான் மூக்குத்தி, கொலுசு என களம் இறங்கி விட்டன கட்சிகள்.  25 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.


இடைத் தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


வேட்பாளர்கள் விவரம்:


  • ஆனந்த் - தேமுதிக
  • மேனகா நவநீதன் - நாம் தமிழர் கட்சி
  • தென்னரசு - அதிமுக
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் - காங்கிரஸ்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்