பகலில் வெளியில் செல்லும் மக்களே உஷார்

Jul 31, 2023,05:07 PM IST
சென்னை : பகலில் வெளியில் செல்லும் தமிழக மக்களுக்காக வானிலை மையம் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சாமாணிய மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மழை, கனமழை, மிதமான மழை குறித்த தகவல்களையே சென்னை வானிலை மையம் வெளியிட்டு வந்தது. சென்னை வானிலை மையம் தெரிவித்தது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை, கோவையில் மழை கொட்டி தீர்த்தது.



இந்நிலையில் தற்போது அடுத்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது மழை பற்றிய அறிவிப்பு கிடையாது. வெப்பநிலை குறித்த அறிவிப்பு தான் வந்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு பகலில் வெளியில் சென்று வேலை செய்வோரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே பாடாய்படுத்திய கோடை வெயிலின் தாக்கம் இப்போது தான் குறைந்துள்ளது என நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்