பகலில் வெளியில் செல்லும் மக்களே உஷார்

Jul 31, 2023,05:07 PM IST
சென்னை : பகலில் வெளியில் செல்லும் தமிழக மக்களுக்காக வானிலை மையம் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சாமாணிய மக்களை கவலை அடைய வைத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மழை, கனமழை, மிதமான மழை குறித்த தகவல்களையே சென்னை வானிலை மையம் வெளியிட்டு வந்தது. சென்னை வானிலை மையம் தெரிவித்தது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னை, கோவையில் மழை கொட்டி தீர்த்தது.



இந்நிலையில் தற்போது அடுத்த அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது மழை பற்றிய அறிவிப்பு கிடையாது. வெப்பநிலை குறித்த அறிவிப்பு தான் வந்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு பகலில் வெளியில் சென்று வேலை செய்வோரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே பாடாய்படுத்திய கோடை வெயிலின் தாக்கம் இப்போது தான் குறைந்துள்ளது என நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் மீண்டும் வெயில் அதிகரிக்கும் என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்