கரூர், ஈரோட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

May 29, 2023,12:45 PM IST
கரூர்/ஈரோடு : ஈரோட்டில் டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்ம் வீட்டில் அதிகாரிகள் 4வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சோதவை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்தரக்காரர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்தம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர். சச்சிதானந்தம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.



தமிழக மின்துறை மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோதவையிட வந்த அதிகாரிகளை சிலர் தடுக்க முயன்றனர். அதிகாரிகளை தடுக்க வந்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரூர், ஈரோடு, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் சச்சிதானந்தம் வீட்டில் இருந்து இதுவரை ரூ.2.1 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இந்த சோதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரிலும் தொடர்ந்து ஐடி ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்