கரூர், ஈரோட்டில் 4வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

May 29, 2023,12:45 PM IST
கரூர்/ஈரோடு : ஈரோட்டில் டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்ம் வீட்டில் அதிகாரிகள் 4வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சோதவை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்தரக்காரர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தக்காரர் சச்சிதானந்தம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றினர். சச்சிதானந்தம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயன்படுத்தி வந்த வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.



தமிழக மின்துறை மற்றும் ஆய்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோதவையிட வந்த அதிகாரிகளை சிலர் தடுக்க முயன்றனர். அதிகாரிகளை தடுக்க வந்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரூர், ஈரோடு, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் சச்சிதானந்தம் வீட்டில் இருந்து இதுவரை ரூ.2.1 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இந்த சோதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரிலும் தொடர்ந்து ஐடி ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்