புதுடில்லி : 2025 ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்., ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 13) துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அமர்வின் முதல் நாளே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி பாஜக குரல் எழுப்ப, அதானி கடன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. அமளிக்கு இடையே அதானி கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவனம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி விதிகளின்படி எந்த நிறுவனத்தின் கடன் விபரத்தையும் வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் விமான நிலையங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி, 2025 ம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}