விமான நிலையங்களை குத்தகைக்கு விட திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

Mar 14, 2023,10:55 AM IST

புதுடில்லி : 2025 ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்., ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 13) துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அமர்வின் முதல் நாளே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி பாஜக குரல் எழுப்ப,  அதானி கடன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. அமளிக்கு இடையே அதானி கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவனம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி விதிகளின்படி எந்த நிறுவனத்தின் கடன் விபரத்தையும் வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.




இந்நிலையில் விமான நிலையங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.


தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி, 2025 ம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.


சமீபத்திய செய்திகள்

news

டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?

news

Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்