விமான நிலையங்களை குத்தகைக்கு விட திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

Mar 14, 2023,10:55 AM IST

புதுடில்லி : 2025 ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்., ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 13) துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அமர்வின் முதல் நாளே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி பாஜக குரல் எழுப்ப,  அதானி கடன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. அமளிக்கு இடையே அதானி கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவனம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி விதிகளின்படி எந்த நிறுவனத்தின் கடன் விபரத்தையும் வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.




இந்நிலையில் விமான நிலையங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.


தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி, 2025 ம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.


சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்