புதுடில்லி : 2025 ம் ஆண்டு வரை நாட்டில் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்., ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 13) துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது அமர்வின் முதல் நாளே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது பற்றி பாஜக குரல் எழுப்ப, அதானி கடன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. அமளிக்கு இடையே அதானி கடன் தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவனம் மட்டுமல்ல, ரிசர்வ் வங்கி விதிகளின்படி எந்த நிறுவனத்தின் கடன் விபரத்தையும் வெளியிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் விமான நிலையங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின் படி, 2025 ம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 25 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் குத்தகைக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.
அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்
தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list
பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா
நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)
UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்
ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு
ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!
{{comments.comment}}