சர்வதேச தாய் மொழி தினம் 2023 : தாய்மொழியின் முக்கியத்துவமும், வரலாறும்!

Feb 21, 2023,11:16 AM IST
புதுடில்லி : மனித இனம் பரிமாண மாற்றம் அடைந்ததன் முக்கிய அடையாளம் மொழி. இதன் மூலமே ஒருவர் தனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாற உதவுகிறது. மொழி பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு நாடு, இடத்திற்கும் ஏற்றது போது மொழியும் மாறுபாடு அடைகிறது.



எத்தனை மொழிகளில் கற்றுத் தெரிந்தாலும், ஒரு மனிதனுக்கு உயிராக இருப்பது தாய்மொழி மட்டுமே. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற மொழிகளை உயர்வாகவும், தாய்மொழியை சாதாரணமாகவும் நினைக்கும் போக்கு மனிதர்களிடம் அதிகரித்து வருவதால் பேசப்படாததால் பல மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

உலக தாய் மொழி தினம் கொண்டாடுவதன் நோக்கம் : 

இதை தடுக்கும் முறையாகவும், தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ம் தேதி உலக தாய் மொழி தினமாக கொண்டாடப்படகிறது. கலாச்சார பாதுகாப்பு, பண்முகத்தன்மை, பல மொழிகளை கற்க வேண்டும் என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும். நூற்றுக்கணக்கான மொழிகளின் தாயாகமாக உள்ளது இந்தியா. பல கலாச்சாரங்கள், பல மொழிகள், இடத்திற்கு இடம், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. 


உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு :

மொழி, தகவல் தொடர்புக்கான சாதனம் மட்டுமல்ல ஒரு கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளம். சர்வதேச தாய்மொழி தினம் உருவானது வங்கதேசத்தில் தான். 1952 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி வங்க மொழியை தங்களின் தாய்மொழியாக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்த 4 மாணவர்கள் கொல்லப்பட்டதன் நினைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1999 ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. இதை ஐநா பொதுச் சபை வரவேற்றிருந்தது. மொழிகளை பாதுகாக்க வேண்டும். அது உலக மக்களால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்