இறையன்பு, சைலேந்திர பாபு இன்று ஒரே நாளில் ஓய்வு

Jun 30, 2023,11:28 AM IST
சென்னை : தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளராக சிதாஸ் மீனாவும், டிஜிபி.,யாக சஞ்சய் அரோராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வயது மூப்பின் காரணமாக இறையன்பு மற்றும் சைலேந்திர பாபு ஆகியோர் பணி ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு கெளரள பதவிகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 62 வயது வரை டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவராகவும், உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும் என்பதால் அவரை இந்த பதவிக்கு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



இதே போல் இறையன்பு ஐஏஎஸ்.,க்கும் கெளரவ பதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் வேண்டாம் என இறையன்பு ஏற்கனவே மறுத்து விட்டதால் தனது ஆலோசகராக தனது பக்கத்திலேயே இறையன்பை வைத்துக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்