சென்னை: புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்ற மூன்று விதமான காதலை சொல்லும் படம் தான் "காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் ". இது முற்றிலும் புதுமையான படமாக உருவாகியுள்ளதாம்.
காதலை விதம் விதமாக எடுப்பதில் தமிழ் சினிமாக்காரர்கள் கில்லாடிகள். சொல்லாத காதல், சொல்ல மறந்த காதல், சொல்ல முடியாத காதல் என தினுசு தினுசாக எடுத்த தமிழ் சினிமாவில் இப்போது இன்னும் ஒரு வித்தியாசமான படம் வந்துள்ளது.

காதலை மூன்று வகைப்படுத்தி இன்றைய இளைஞர் இளைஞிகளுக்காக வெளிவந்திருக்கும் படம் தான் "காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் " என்ற படம். கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்று இப்படத்தை கெளரி சங்கர் இயக்கியுள்ளார். எம்.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் " காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை காதலர் தினம் " என்ற படத்தை தமது மூன்றாவது படமாக இயக்கியுள்ளார் இயக்குனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, து.மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில், சரவணன் , அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் கெளரி சங்கர் பேசுகையில், இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}