சென்னை : சிவ பெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ருத்ர ரூபமாக விளங்கக் கூடியவர் கால பைரவர். இவர் சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர். இப்போதும் கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகு கோவிலின் சாவியை பைரவரிடம் ஒப்படைக்கும் வழக்கம் உள்ளது.

அந்தகாசுரன் என்ற அசுரன் சிவ பெருமானிடம் இருளை வரமாக பெற்றவன். அந்த இருளைக் கொண்டு, உலகையே இருளில் மூழ்க வைத்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். அப்போது சிவனிடம் இருந்து ருத்ர மூர்த்தியாக வெளிப்பட்ட பைரவர், அந்தகாசுரனை அழித்து அனைவரையும் காத்தார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு சூப்பர் சம்பளம்.. பாகிஸ்தான் கேப்டனை விட ஜாஸ்தி.. நெட்டிசன்கள் டிரோல்!
கால பைரவர் பல ரூபங்களில், பல பெயர்களில் அருள்பாலிக்கிறார். இவர் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையிலும் சூடியும் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கக் கூடியவர். இவரது வாகனமாக நாய் உள்ளது. இவரே நவகிரகங்களின் பிராணனாக விளங்குபவர்.
பொதுவாக அஷ்டமி நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்பார்கள். ஆனால் இது வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அதிலும் தேய்பிறை திதியில் வரும் அஷ்டமி நாள் கால பைரவரை வழிபட மிகவும் ஏற்ற காலமாகும். வில்வ மாலை, தாமரை மாலை, தும்பை மாலை இவற்றை சாத்தி, மல்லிகை தவிர மற்ற வாசனை மலர்களால் பைரவரை வழிபட வேண்டும்.
மிளகு கலந்த வடை மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். மரண பயம், தீவினைகள், நவகிரக தோஷங்கள் நீங்கும். பைரவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}