யார் இந்த கால பைரவர் .. அவரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் ?

Feb 15, 2023,11:16 AM IST

சென்னை : சிவ பெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ருத்ர ரூபமாக விளங்கக் கூடியவர் கால பைரவர். இவர் சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர். இப்போதும் கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகு கோவிலின் சாவியை பைரவரிடம் ஒப்படைக்கும் வழக்கம் உள்ளது.


அந்தகாசுரன் என்ற அசுரன் சிவ பெருமானிடம் இருளை வரமாக பெற்றவன். அந்த இருளைக் கொண்டு, உலகையே இருளில் மூழ்க வைத்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். அப்போது சிவனிடம் இருந்து ருத்ர மூர்த்தியாக வெளிப்பட்ட பைரவர், அந்தகாசுரனை அழித்து அனைவரையும் காத்தார்.


ஸ்மிருதி மந்தனாவுக்கு சூப்பர் சம்பளம்.. பாகிஸ்தான் கேப்டனை விட ஜாஸ்தி.. நெட்டிசன்கள் டிரோல்!


கால பைரவர் பல ரூபங்களில், பல பெயர்களில் அருள்பாலிக்கிறார். இவர் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையிலும் சூடியும் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கக் கூடியவர். இவரது வாகனமாக நாய் உள்ளது. இவரே நவகிரகங்களின் பிராணனாக விளங்குபவர். 


பொதுவாக அஷ்டமி நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்பார்கள். ஆனால் இது வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அதிலும் தேய்பிறை திதியில் வரும் அஷ்டமி நாள் கால பைரவரை வழிபட மிகவும் ஏற்ற காலமாகும். வில்வ மாலை, தாமரை மாலை, தும்பை மாலை இவற்றை சாத்தி, மல்லிகை தவிர மற்ற வாசனை மலர்களால் பைரவரை வழிபட வேண்டும்.


மிளகு கலந்த வடை மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். மரண பயம், தீவினைகள், நவகிரக தோஷங்கள் நீங்கும். பைரவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்.


சமீபத்திய செய்திகள்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நா ளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

அதிகம் பார்க்கும் செய்திகள்