சென்னை : சிவ பெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ருத்ர ரூபமாக விளங்கக் கூடியவர் கால பைரவர். இவர் சிவன் கோவில்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கக் கூடியவர். இப்போதும் கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகு கோவிலின் சாவியை பைரவரிடம் ஒப்படைக்கும் வழக்கம் உள்ளது.
அந்தகாசுரன் என்ற அசுரன் சிவ பெருமானிடம் இருளை வரமாக பெற்றவன். அந்த இருளைக் கொண்டு, உலகையே இருளில் மூழ்க வைத்து தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவ பெருமானிடம் முறையிட்டனர். அப்போது சிவனிடம் இருந்து ருத்ர மூர்த்தியாக வெளிப்பட்ட பைரவர், அந்தகாசுரனை அழித்து அனைவரையும் காத்தார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு சூப்பர் சம்பளம்.. பாகிஸ்தான் கேப்டனை விட ஜாஸ்தி.. நெட்டிசன்கள் டிரோல்!
கால பைரவர் பல ரூபங்களில், பல பெயர்களில் அருள்பாலிக்கிறார். இவர் நாகத்தை பூணூலாகவும், சந்திரனை தலையிலும் சூடியும் நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கக் கூடியவர். இவரது வாகனமாக நாய் உள்ளது. இவரே நவகிரகங்களின் பிராணனாக விளங்குபவர்.
பொதுவாக அஷ்டமி நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என்பார்கள். ஆனால் இது வழிபாட்டிற்கு உரிய நாளாகும். அதிலும் தேய்பிறை திதியில் வரும் அஷ்டமி நாள் கால பைரவரை வழிபட மிகவும் ஏற்ற காலமாகும். வில்வ மாலை, தாமரை மாலை, தும்பை மாலை இவற்றை சாத்தி, மல்லிகை தவிர மற்ற வாசனை மலர்களால் பைரவரை வழிபட வேண்டும்.
மிளகு கலந்த வடை மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும். மரண பயம், தீவினைகள், நவகிரக தோஷங்கள் நீங்கும். பைரவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தலைவிதியையே மாற்றும் சக்தி படைத்தவர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}