கோயம்புத்தூர் டிரைவர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு.. அசத்திய கமல்ஹாசன்

Jun 26, 2023,01:11 PM IST


சென்னை: கோயம்புத்தூரின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையுடன் வலம் வந்து சமீபத்தில் தனது வேலையை உதறிய ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கார் ஒன்றைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.


கோவையின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமைக்குரியவர் ஷர்மிளா. தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக இருந்து வந்தார். அவர் டிரைவரானது முதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தார். பலரும் அவரைச் சந்தித்துப் பாராட்டினர்.




கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கூட அவரை நேரில் பார்த்து பஸ்சிலும் பயணித்து பாராட்டினார். அதேபோல சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஷர்மிளாவை நேரில் பார்த்துப் பாராட்டி அவர் ஓட்டிய பஸ்ஸிலும் பயணம் செய்தார்.


இந்த விவகாரம் மட்டும் திடீரென பரபரப்பாகி விட்டது. சர்ச்சையாகவும் மாறியது. கனிமொழி வந்தது தொடர்பாக ஷர்மிளாவுக்கும், பஸ் நிர்வாகத்துக்கும் இடையே பூசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தனது வேலையை உதறி விட்டு வெளியேறினார் ஷர்மிளா. அது முதல் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.கனிமொழியும் கூட ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகளைச் செய்ய காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். சில தனியார் நிறுவனங்களும் ஷர்மிளாவுக்கு வேலை தர முன்வந்தன.




இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சத்தம் போடாமல் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். ஷர்மிளாவையும் அவரது குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்த கமல்ஹாசன், ஷர்மிளாவுக்கு ஒரு காரைப் பரிசாக அளித்து அசத்தி விட்டார். மாருதி எர்டிகா காரை வாங்குவதற்கான காசோலையை ஷர்மிளாவிடம் கமல்ஹாசன் அளித்தார். இனி மகள் ஷர்மிளா ஒரு வாடகைக் கார் தொழில் முனைவோராக வலம் வருவார். தன் வயதையொத்த பெண்களுக்கு அவர் சிறந்த ரோல்மாடலாக மாறியுள்ளார். அவர் குறித்த சமீபத்திய விவாதங்கள் என்னை வேதனையுறச் செய்தது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


கமல்ஹாசன் பண்பாட்டு மையம் சார்பில் இந்த கார் பரிசு அளிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்