சேர்த்த பணம் எல்லாம் போச்சு... கடன்காரனாக இருக்கிறேன்... அண்ணாமலை ஓப்பன் டாக்!

Mar 19, 2023,03:31 PM IST
சென்னை : போலீஸ் அதிகாரியாக இருந்து சேர்த்த பணம் எல்லாம் தேர்தலில் செலவாகி விட்டது. இப்போது கடன்காரனாக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓப்பனாக பேசி அளித்துள்ள பேட்டி செம வைரலாகி வருகிறது.

அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கூட்டணி பற்றி முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு எடுக்கும். தமிழக பாஜக தலைவராக ஆன பிறகு நிறைய சொத்து சேர்த்து விட்டதாக பலரும் என்னை பற்றி கூறி வருகின்றனர்.



போலீஸ் அதிகாரியாக இருந்த போது சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து விட்டேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை தேர்தலில் செலவழித்து விட்டு இப்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என மீம்ஸ் போட்டு அண்ணாமலையை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் அண்ணாமலை தனது பேட்டியில், நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி அல்ல. தேர்தலை சந்திப்பது குறித்து எனது நிலைப்பாட்டை கூறினேன். அவ்வளவு தான். எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

மகிழ்ச்சி.. அழகான தொற்று!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்.. சிறந்த காமெடியன்.. கதாசிரியர்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 20, 2025... இன்று நல்ல செய்திகள் தேடி வரும்

news

மார்கழி 05ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 05 வரிகள்

news

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்

news

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்