சீமான், திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... ஸ்டாலின் கண்டனம்

Jun 01, 2023,11:17 AM IST
சென்னை : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சயின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலரும் ட்விட்டர் உள்ள சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடரில் இவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20 க்கும் அதிகமான நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.




மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்சட்டரீதியான கோரிக்கையை ஏற்று, ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிப்பது கண்டனத்திற்குரியது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்