தோனிக்கு முழங்காலில் ஆப்பரேஷன்.. வெற்றிகரமாக முடிந்தது

Jun 02, 2023,04:28 PM IST
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான தோனி, ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் தலைமையிலான சென்னை அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது. தோனி தலைமையிலான அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவது 5வது முறையாகும்.



2023 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி, 12 போட்டிகளில் விளையாடி 104 ரன்கள் எடுத்திருந்தார். இந்த தொடரில் மிகக் குறைந்த ரன்களிலேயே தோனி அவுட்டாகி வந்தார். இதற்கு காரணம் அவரது முழங்காலில் ஏற்பட்டிருந்த காயம் தான். இதனால் அவரால் வேகமாக ஓட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். ஐபிஎல் பைனலின் போது கூட டிரெசிங் ரூமில் தோனி தனது முழங்கால் காயத்திற்கு கட்டு போட்டுக் கொண்ட வீடியோ ஒன்று வைரலானது.

2023 ஐபிஎல் உடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக முடிவு செய்திருந்தார் தோனி. ஆனால் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் காட்டும் அன்பிற்காக ஒன்னொரு சீசனில் விளையாடிய பிறகு ஓய்வை அறிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கும் தான் கொடுக்கும் கிஃப்ட் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார். இன்னும் சிறிது நாட்கள் தோனி ஓய்வில் இருப்பார் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!

news

புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!

news

சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை

news

மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!

news

பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா

அதிகம் பார்க்கும் செய்திகள்